Monday, March 30, 2009

“சல்யூட்” -- நமது கடமை.

இந்திய நாட்டை காப்பதற்காக தனது உயிரை துச்சமென மதித்து எதிரிகளையும், தீவிரவாதிகளையும் சல்லடையாக்கும் ‘சீருடை பணியாளருகளுக்கு’ நாம் என்றுமே கடமைப்பட்டிருக்கிறோம். நாம் இங்கு அமைதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்கள் அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள்.

அவர்கள் இராணுவம், எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜி., சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஆர்.பி.எப்., ஆர்.பி.எஸ்.எப்., மற்றும் மாநில காவல்துறைகள் என்று பல பிரிவுகளில் நமக்கு பாதுகாவலாக விளங்குகின்றனர்.

25CA6SKHUCCAEO29SLCA8QIS5VCAOO6QE4CAYOCLI1CA6NALYVCAR7ZBHFCAQC3HGDCAMD3DDACA9TSE2ZCAD87P0XCADMR6E0CAV0A4VMCAFPYJQHCAQZ1TR2CAF5OJ6QCAQ8T6RWCAPM4CRNCAN1M3KJ

இவர்கள் நமது நாட்டில் உள்ள வி.ஐ.பிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஒரு கமிட்டி செயல்பட்டு வருகிறது. அதில் எடுக்கப்படும் முடிவு பொறுத்து வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்கள் நான்கு பிரிவுகளில் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

1. இசட் ப்ளஸ் (z+) :

இசட் ப்ளஸில் இரண்டு பிரிவு.

i. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு: [சிறப்பு பாதுகாப்புப்படை]

இந்திய நாட்டின் முன்னாள், இன்னாள் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பர்.

ii. என்.எஸ்.ஜி. பாதுகாப்பு: [தேசிய பாதுகாப்புப்படை]

கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முதல்வர், முன்னாள் முதல்வர்கள் ஆகியோர்களுக்கு இப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இவர்கள் ‘கருப்பு பூனை படை’ என்றும் அழைக்கப்படுவர்.

2. இசட் (Z) :

இசட் பாதுகாப்பு பிரிவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். முக்கிய மத்திய அமைச்சர்கள், தீவிரவாதிகளால் மிரட்டல் விடப்பட்ட கட்சித் தலைவர்கள், முக்கிய என்கவுண்டர்களில் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிப்பர்.

3. ஒய் (Y) :

ஒய் பாதுகாப்பு பிரிவில் மாநில போலீஸார் பயன்படுத்தபடுவர். மிரட்டல் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பர். இவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் வீட்டிலும் போலீஸார் பாதுகாப்புக்கு பணி அமர்த்தப்படுவர்.

பிரபலமான நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள்,விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கும் இப் பிரிவினர் பாதுகாப்பு அளிப்பர்.

4. எக்ஸ் (X) :

அந்தந்த மாநில உள்துறை செயலாளர் தலைமையில் இப்பிரிவு இயங்கும். முக்கிய பிரமுகர்களுக்கு அவர்கள் தொழில் ரீதியாக எதிரிகள் இருந்தால் அவர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கைகள் உண்மையானதா என உளவு பிரிவு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அதன் பிறகு பாதுகாப்பு அளிக்கப்படும்.

இவ்வாறாக சிறப்பாக பணியாற்றும் இவர்களை போன்ற அனைத்து சீருடைப்பணியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது தேர்தல் பணிக்காக.

YLCAU3HKH0CABC6ENXCAGDSXKDCAUMVQAYCA0GFXRQCAJOQHUDCA1R05TACA750L74CAATGWHKCAD75QQJCAILLP67CA837OHLCAB11M6ECAHHOHCBCA90NRQ6CAW5Q1TNCA2H6FLFCALGOBFDCA54VE12

தேசத்திற்காக 'சல்யூட்' செய்யும் இவர்களை நாம் “சல்யூட்” செய்ய‌ கடமைப்பட்டிருக்கிறோம்.

ஜெய்ஹிந்த்!.

Thursday, March 26, 2009

"இறுதியாய் ஒரு க‌டித‌ம்".

என் காதல் ஜென்மத்தில்

நாட்களை நகர்த்தும்

என் விழியான காத‌லிக்கு

இரக்கம் காட்ட‌

இறுதியாய் ஒரு கடிதம்!

நம்பிக்கையின்நரம்பை நருக்கென இழுத்தவளே...

உன் மவுனத்தால் என் மனது மெதுமெதுவாய்

வலிக்கு உட்படும் என்பதனால் சீற்றத்தால்

ஒரேயடியாய் சிதற‌செய்தாயோ...

'கல்நெஞ்சகாரியே' என்றதனால்

எவ்வளவு இறங்கியும் இரக்கமே இல்லாமல்

எட்டி உதைத்தாயோ?

நீ இல்லாத துயரத்தை சுமக்க முடியாமல் சுமக்கிறது நிமிடங்கள்...

கலங்காமல் இருக்க‌ கண்மணிகள் வேண்டும்..

உயிரோடு ஒட்டாமல் ஒட்டுசுவராய்

ஏன் விலகுகிறாய்?

வா... வந்து ஒட்டிவிடு...

உன் பிரிவில் உருகுலையும்

என் உள்ளத்திற்கு உயிர்கொடு...

உனது உள்ளத்தில் ஏங்கேனும்

ஒரு மூலையில் அணு அளவாவது

என் காதல் ஒட்டியிருந்தால்...

எனை சுற்றி இருக்கும்

துன்ப‌ க‌ட‌லில் விழ‌ தொங்கிக்கொண்டிருக்கும்

என்னை தாங்க‌

கைசேர்த்து வா...

இல்லையென்றால்...

எழுத தெரிய‌வில்லை...

ஒரே வ‌ரியில்...

"இறுதியாய் ஒரு க‌டித‌ம்".

Monday, March 23, 2009

காசு கொடுப்ப‌தாக இருந்தால் முத‌ல்லேயே சொல்ல‌க்கூடாதா?...சார்!

வேலை என்று வரும்போது கடமை தவறாமல், செய்கிற வேலைக்கும், என் மனசாட்சிக்கும் துரோகம் செய்யக்கூடாது என எண்ணுவேன். இதுதான் என் பாலிஸி.

இது எதற்காக என்றால் நான் டியூட்டியில் இருக்கும்போது எந்த ஒரு பொருள் அல்லது சாப்பாடு வாங்கினாலும் அதற்குரிய பணத்தை கொடுத்துவிடுவேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் இலவசமாகவோ, சலுகை பெறவோ எண்ணமாட்டேன். எப்பொழுதும் பொருட்களை வாங்கி முடித்ததும் பணத்தை கொடுப்பேன். ஆனால் இப்பொழுது பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டுதான் பொருட்களை தேர்வு செய்யவோ, சாப்பிடவோ செய்வேன். இம்மாற்றத்திற்கு ஒரு சம்பவம்தான் காரணம்...

சென்னை, பார்க் ரயில் நிலையம்., நானும் எனது நண்பரும் டியூட்டியில் இருந்தபோது ப்ளாட்பார நடுவில் இருக்கும் டீ கடைக்கு சென்றோம். இருவருக்கும் பால் ஆர்டர் கொடுத்தோம். 'தருகிறேன் சார்!' என்றவன் மற்ற எல்லோருக்கும் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தியவன் எங்களை கண்டுகொள்ளவே இல்லை..

எனக்கு சற்று கோபம் வர..
'தம்பி.. தரப்போறியா? இல்லையா?.. என்றேன்.

'இதோசார்!'

என ஆளுக்கொரு டம்ளரில் பால் ஊற்றித் தந்தான். இருவ‌ரும் வாங்கி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். ட‌ம்ள‌ரை அருகில் உள்ள‌ குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ப‌ர்சை எடுத்து 10ரூபாய் நோட்டை எடுத்து அவ‌னிட‌ம் நீட்டினேன்.

'இந்தாப்பா.. சில்ல‌ரையாவ‌து சீக்கிர‌ம் கொடு..'

'என்ன‌ சார்! காசு கொடுப்ப‌தாக இருந்தால் முத‌ல்லேயே சொல்ல‌க்கூடாதா?'

'ஏம்பா? எத‌ற்கு?..'

'இல்ல‌ சார்! ந‌ல்ல‌ பாலா த‌ந்திருப்பேன் சார்..'

'அட‌ப்பாவி! அப்ப‌ இப்போது என்ன‌டா த‌ந்தாய்?'

'ஸாரி சார்! காலையில‌...தீஞ்சுபோன‌...ஸாரி சார்!!?.' என்று த‌லையை சொரிந்தான்.

அவ‌னை அப்ப‌டியே தீய்ச்சி விட‌லாம் என‌ கோப‌ம் வ‌ந்தாலும் அவ‌ன் என்ன‌ செய்வான்?.. என.. ஒரு பெரிய‌ கேள்விகுறியோடு நானும், என் ந‌ண்ப‌ரும் அவ்விட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்தோம்.

.

Tuesday, March 17, 2009

“கிலோக்கணக்கில்..!”

அபிநய சுடரே..

அத்தையின் மகளே..

புத்தாடை புனைந்தால் போதாது,

 

வான் மழை பொழிய

வாழ்வில் வளம்பெற

பூமி ஆனந்தவிழாவாக

மாற..

 

இதழ் சுவைக்கும் இனிப்புகளோடும்,

இதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்,

காதலை பங்கிட்டு, இந்த நாள்

இதய திருவிழா நாளாக

ஆண்டு கணக்கில்

என்

ஆழ் மனதில் படிய..

 

சோர்வான நிமிடங்கள்

உன் பட்டாசு புன்னகையால் சிதற

என் மனதில்

மகிழ்வு பொங்க வா...

என் காதலியே வா...

வந்து புன்னகைத்துவிடு...

VSCAQ70OJPCAMX03YPCAW9D5FRCAX36DXZCA1E1CQUCAEZYRR2CAIGJT1BCAO20PZSCAO1D2IWCALT93U9CABN3IWZCABWZLQ1CA3MR8D4CA8TZT3DCAMNZB0CCAAC6KNMCASF5SNMCANJOE3ZCAQ45ZLF

 

கொஞ்சமல்ல

கிலோக்கணக்கில்..!”

.

Saturday, March 14, 2009

ஹி இஸ் கிரேட்..!

சென்னை பெருங்குடி ரயில் நிலையம்: இரவு 08.35மணி.

நேரம் அதிகமாகி விட்டதால் ப்ளாட் பாரத்தில் சரியாக சொன்னால் என்னையும் சேர்த்து 6 பேர் இருந்தோம். நான் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு நபர் ப்ளாட்பாரத்தின் கடைசி ஓரத்தில் இருந்து நடுவிற்கு நடந்து வந்தார். அவர் பக்கத்தில் வரவர அவர் பக்கம் என் கவனம் திரும்பியது.

நல்ல உயரம், அழகான உடல்வாகு, ‘போலீஸ்கட்’ ஹேர் ஸ்டைல், பேண்ட் புல்கேண்ட் சர்ட், ‘டக்’ பண்ணி பார்ப்பதற்கு அழகாக இருந்தார். வேகமாக நடந்து வந்த அவர் ப்ளாட்பார நடுவில்.. ஓரளவுக்கு எனது பக்கத்தில் வந்து நின்றார். பக்கத்தில் நான் செல்போன் பேசி கொண்டிருந்தேன். என்னை கவனித்து கொண்டிருந்த அவர் நான் போனை வைத்ததும்..

‘எக்ஸ்கியுஸ்மீ சார்’ என்றார்.

‘எஸ்!’.

‘08.33 வண்டி போய்விட்டதா சார்?’

‘அதற்காகத்தான் நானும் வெயிட்டீங்.’

‘ஓ.. தேஇங்க் யூ சார்.. போயிருக்கும் என்று வேகவேகமாக வந்தேன்’

‘தினசரி இந்த வண்டிக்குதான் வருவீங்களா’

‘இல்ல சார் வெள்ளிகிழமை தோறும் வருவேன்’ என்றார்.

என்னிடம் பேசி முடித்தவுடன் கையில் இருந்த செல்போனை எடுத்து டயல் செய்தார். அவர் நம்பர் டைப் பண்ண ஒவ்வொரு நம்பரையும் செல்போன் திரும்பி சொன்னது. போன் பேசி முடிந்ததும் அமைதியாக அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். ரயில் வந்து நிற்கவும் நேராக நடந்து சென்று வண்டியின் சைடில் தாளம்போட்டவாறே வாசல் வந்ததும் ஏறி அருகிலுள்ள சீட்டில் அமர்ந்தார்.

நானும் அருகில் அமர்ந்தேன்.மறுபடியும் செல்லை எடுத்து யாருக்கோ டிரை பண்ணிவிட்டு வைத்துவிட்டார். பிறகு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டவந்த அவர் அவ்வப்போது உள்ளே பேசும் நபர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். ‘பார்க் டவுண்’ வந்ததும் மெதுவாக வாசல் அருகே வந்து இறங்கி ப்ளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றார்.[எல்லோரும் போவதற்கு வழிவிடுவது போல..] ‘என்னசெய்ய போகிறார்?’ என நானும் ஓரமாக நின்றேன். சிறிது நேரத்தில் அவர் நடக்க ஆரம்பித்தார். நான் அவர் அருகில் சென்று ‘ஏன் சார் யோசித்து நடந்து வருகிறீர்கள்?” என்றேன்.

‘ஸாரி சார்! எனக்கு கண் தெரியாது!’ என்றார். மனதிற்குள் “திக்” என்றது. எப்படி சார்.. ‘ஸ்டிக்’ இல்லாமல்.. என்றதற்கு... ‘பழகிவிட்டது சார்.’ என்றுகூறி விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

அவரை திகைத்து பார்த்து கொண்டிருக்கும் போதே என் மனதில் அவரைப்பத்தி ஒரு ‘ப்ளாஸ்பேக்’ ஓடியது...

1.படியேறும் வரை அமைதியாக வந்துவிட்டு நேர்நடையாக வந்தது.,

2.அருகில் நபர் இருப்பதை உணர்ந்து பேசியவிதம்.,

3.செல்போன் டையல் செய்யும் எண்ணை திருப்ப சொன்னது.,

4.ரயிலில் நேராக ஜன்னல் வரவும் தாளம் போட்டுகொண்டே வாசலில் ஏறியது.,

5.தன்னை காட்டிகொள்ளக்கூடாது என்பதற்காக பிறர் பேசுவதை வேடிக்கை பார்ப்பதுபோல் நடந்தது.

IZCA18J0TPCANXJU48CA961TQJCAR22TFLCAHTRRYMCA3B978WCA0O9WVQCA92YD4PCALWFBEQCAQBCBJCCAWWCS59CAO0H4DVCAZ72O33CAH9VH3NCAE6EPSVCADH0VAACAJIECEOCAXVBYW4CAF20ZHS

தன்னிடம் உள்ள குறையை வைத்து பிறரிடம் அனுதாபம் பெறுபவர்களிடையே, தன் குறையை பொருட்படுத்தாமலும், வெளிகாட்டாமலும், செல்லும் இந்நபரை என்ன சொல்வது?...

ஹி இஸ் கிரேட்...!

Friday, March 13, 2009

பெண் பதிவருக்காகவும், ஆண் பதிவரென்றால் அவர்களின் [ வருங்கால ] மனைவிக்காகவும்!...

      பெண் பதிவருக்காகவும், ஆண் பதிவரென்றால் அவர்களின் [ வருங்கால ] மனைவிக்காகவும்    இப்பதிவு    எழுதப்படுகிறது. இந்த    தலைப்பில் எழுத    ஆயிரம்    விஷயம்    இருந்தாலும் இப்போது ஒன்றைப்பத்தி எழுதுகிறேன். தினமும்   வீட்டில் பெண்கள் விளக்கேற்றும் பழக்கமுடைவர்கள். அதைப் பற்றிய எனக்கு தெரிந்த [எங்கோ படித்த?..] சில விவரங்களை எழுதியுள்ளேன். அப்படி விளக்கேற்றும் பழக்கமுடையவர்கள் மட்டும்   தொடர்ந்து   படியுங்கள்...    தவறு    இருப்பின் சுட்டிகாட்டுங்கள்.. திருத்திக்கொள்கிறேன். இல்லையேல் வழக்கம்போல பின்னூட்டமும்,ஓட்டும் போட்டுவிடுங்கள். ஏனென்றால் ஓட்டு கேட்டு வாங்கும் பழக்கம் எனக்கு கிடையாது.[!?]. இப்ப மேட்டருக்கு வருவோம்...

 

1.குத்துவிளக்கின் தீபம் கிழக்குமுகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்!

2.மேற்குமுகமாக ஏற்றினால் கிரஹதோஷம்,பங்காளிப்பகை உண்டாகும்!

3.வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்.திரண்ட செல்வம் உண்டாகும்!

4.தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம்,பெரும்பாவம் உண்டாகும்.

CNCADC0BHDCATD0IE6CABEO3S8CAGTDI0NCAV6ABCNCA78RVWICACQ7C16CAFWABYKCAG6GG3ZCAVR3GTDCAAN6EZTCARD71PUCAHSF2Z6CAE2GAP0CAOJKWADCAPLEQ11CA8849A6CAL6M2LYCA3D4B3Q

5.குத்துவிளக்கில் தீபம் ஒரு முகமாக ஏற்றினால் மத்திம பலன் கிடைக்கும்!

6.இரு முகமாக ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்!

7.மும் முகமாக ஏற்றினால் புத்திரசுகம், கல்வி கேள்விகளில் விருத்தி அடையும்!

8.நான்கு முகமாக ஏற்றினால் பசு,பால்,பூமி சேர்க்கை!

9.ஐந்து முகமாக ஏற்றினால் சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐஸ்வர்யலஷ்மி கடாட்சம் பெருகும்!

10.தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்!

11.வாழைத்தண்டு நூலில் திரி போட்டால் குலதெய்வ குற்றம், சாபம் போகும்!

12.புது மஞ்சள் சேலைத்துண்டில் திரி போட்டால் தாம்பத்திய தகராறு நீங்கும்!

13.புது வெள்ளை வஸ்த்திரத்தில் பன்னீரை விட்டு உலரவிட்டுப் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மூதேவி அகன்று விடுவாள்!

14.விளக்கிற்கு இடும் எண்ணெய் நல்லெண்ணெய் எனில் மத்திம பலன்!

15.விளக்கெண்ணை எனில் துன்பங்கள் விலகும்!

16.இலுப்பை எண்ணெய் எனில் பூஜிப்பவருக்கும்,பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டாகும்!

17.நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்!

அவ்வ்வ்வளவுதானுங்கோ!...

{என்னை பொருத்தவரை நம்ம மக்கள் விளக்கேத்தினாலே பெரிய விஷயம்.?!.}

Monday, March 9, 2009

அடிச்சாச்சு சதம்! { “நாட்அவுட்” பேட்ஸ்மேன் }

பேச்சுவழக்கு பழமொழிகள் என்ற தலைப்பில் நான் அடித்த அரைசதம் நண்பர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து நின்னு ஆடலாம் என முடிவு செய்து தனி இன்னிங்க்ஸாகவே ஆடலாம் என முயற்சி செய்து,

அடித்து ஆடப்போகிறேன்...250e57b0ab05d559d25a3e405c8fd861[1]

ஸ்கோர் போர்டு:

1. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்!

2. பல் போனால் சொல் போச்சு!

3. உதடு தேய்வதைவிட உள்ளங்கால்கள் தேயலாம்!

4. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!

5. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!

6. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்!

7. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை

     பாடி கறக்கணும்!

8. சிறுதுளி பெரு வெள்ளம்!

9. விதை ஒன்று போட்டால், சுரை ஒன்றா முளைக்கும்!

10. தாமரை இலை தண்ணீர் போல!

11. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!

12. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்

     பிள்ளை தானே வளரும்!

13. கருப்பே அழகு, காந்தலே ருசி!

14. உப்பில்லா பண்டம் குப்பையிலே!

15. ஆண்டாண்டு காலம் அழுதாலும், மாண்டவர்

     வருவாரோ மானிடத்தில்!

16. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது!

17. பழத்த ஓலையை பார்த்து குறுத்து ஓலை சிரித்தால்,

     குறுத்து ஓலையும் ஒருநாள் பழுத்த ஓலையாகும்!

18. தன் வினை தன்னை சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்!

19. நாய் விற்ற காசு குறைக்காது!

20. ஊர்கூடி தேர் இழுக்கணும்!

21. மைத்துனிக்கு மிஞ்சிய உறவும் கிடையாது,

     முடிக்கு மிஞ்சிய  கருப்பும் கிடையாது!

22. ஆடிப் பட்டம் தேடி விதை!

23. ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்!

24. எறும்பு ஊர கல்லும் தேயும்!

25. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்!

26. ஆபத்தில் உதவும் நண்பனே, உண்மையான நண்பன்!

27. பிள்ளையார் கோவிலை இடித்து பெருமாள் 

     கோவில்   கட்டுவதா?.!

28. எலி வலையனாலும் தனி வலை வேண்டும்!

29. பதறிய காரியம் சிதறும்!

30. சிறுதுளி பெருவெள்ளம்!

31. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

32. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்!

33. பணம் பத்தும் செய்யும்!

34. நெருப்பில்லாமல் புகையாது!

35. வருமுன் காப்பதே சிறந்தது!

36. வாய்மையே வெல்லும்!

37. ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?.!

38. ஒற்றுமையே பலம்!

39. செய்யும் தொழிலே தெய்வம்!

40. நேர்மையே சிறந்த கொள்கை!

41. பழக பழக பாலும் புளிக்கும்!

42. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

43. மனமிருந்தால் மார்க்கமுண்டு!

44. ஈயத்தை பார்த்து இழித்ததாம் பித்தளை!

45. வெள்ளம் வரும்முன் அணை போடவேண்டும்!

46. புயலுக்கு பின் அமைதி!

47. அறிவு ஆற்றல் வாய்ந்தது!

48. அதிகம் கேள், குறைவாக பேசு!

49. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!

50. பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்!

f2860c0aacd532ff9d2cb50fc709e268[1]

51. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!

52. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி!

53. வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?.!

54. தன்னைப்போல் பிறரையும் நேசி!

55. வெறுங்கை முழம் போடுமா?

56. வாக்குவாதம் செய்ய இருவர் தேவை!

57. அமாவாசை சோறு என்னைக்கும் அகப்படுமா?

58. புதுவிளக்குமாறு நல்லாதான் பெருக்கும்!

59. நன்றாய் முடிவதெல்லாம் நன்மைக்கே!

60. மொட்டைதலைக்கும் முழங்காழுக்கும்

     முடிச்சு  போடமுடியுமா?

61. கடை தேங்காய் எடுத்து வழி பிள்ளையாருக்கு 

     உடைத்தானாம்!

62. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

63. ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை வேணும்!

64. முசபுடிக்கிற நாயை மூஞ்சப்பாத்தாலே தெரியும்!

65. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

66. சுத்தம் சோறு போடும்!

67. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்!

68. ஆனைக்கும் அடி சறுக்கும்!

69. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்!

70. உழைப்பே உயர்வு தரும்!

71. நுனலும் தன் வாயால் கெடும்!

72. சும்மாகிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி!

73. அழுதபிள்ளை பால் குடிக்கும்!

74. மூர்த்தி சிறித்தாயினும் கீர்த்தி பெரியது!

75. பணம் பாதளம் வரை பாயும்!

76. முயற்சி திருவினையாக்கும்!

77. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!

78. வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடையனும்!

79. கூடி வாழ்ந்தாலும் கோடி நன்மை!

80. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்தான்!

81. யாதும் ஊரே யாவரும் கேளிர்!

82. ஓட்டைசட்டியில் கொழுக்கட்டையை வேகவைத்தல் போல்!

83. உப்புக்கு சித்தாத்தால் உறவுமுறைக்கு நெய்வார்த்தால்.!

84. ஆடத்தெரியாதவன் மத்தளம்மேல் விழுந்தான்!

85. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்!

86. சோழியங்குடிமி சும்மா ஆடாது!

87. சாமிக்கே சப்பரம் இல்லையாம், பூசாரிக்கு புல்லட் கேட்குதா!

88. பூசாரியே சோத்துக்கு அழைய லிங்கம்

     பஞ்சாமிர்தம் கேட்டதாம்!

89. எரியிர வீட்டில் பிடிங்கிய வரை லாபம்!

90. முருங்கை பருத்தாலும் உத்திரத்திற்கு ஆகாது!

91. இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை!

92. எறும்பூர கல்லும் தேயும்!

93. அம்மி அறைக்க அறைக்க கரடிமேல் ஏறாது.!

94. துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டும்!

95. வீரன் ஒருநாள் சாவான், கோழை தினந்தினம் சாவான்!

96. அலை ஓய்ந்து குளிப்பதெப்போ!

97. ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்!

98. கேட்பவன் கேனையனென்றால் கேப்பையிலும்

     நெய் வடியும்!

99. பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்!

100. பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு!

ee7d593b680afd68bd813b64eba08869[1]

101. வாளினும் எழுதுகோள் வலிமையுடையது!

 

     அடிச்சாச்சு சதம்! { “நாட்அவுட்” பேட்ஸ்மேன் }

Friday, March 6, 2009

பழமொழியில் அரைசதம் !

“வழக்கொழிந்த வார்த்தைகள்” என்ற தலைப்பு பதிவர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று நமக்கு தெரியாத தமிழ் வார்த்தைகளைப்பற்றி அறிவதற்கு உதவியது. என்னையும் எழுத நண்பர்கள் ப்ரேம் மற்றும் கார்த்திகைப்பாண்டியன் கேட்டிருந்தனர். விரைவில் முயற்சி செய்கிறேன். இதேபோல் “வழக்கொழிந்த பழமொழிகள்” என்ற தலைப்பில் அதிக நண்பர்கள் பதிவுகள் போட்டுள்ளனர்.என்னையும் இந்த தலைப்பில் நண்பர் ‘ராட்மாதவ் அவர்கள்’ எழுதச்சொல்லி கேட்டிருந்தார். முதலில் இதற்கு முயற்சி செய்யலாம் [இது நமக்கு ஈசி என்பதால்..]என்று முடிவு செய்து இதை எழுதுகிறேன். ஆனால் ‘வழக்கொழிந்த பழமொழிகள்’ என்று எடுத்துக்கொள்ளாமல் ‘பேச்சுவழக்கு பழமொழிகள்’ என்று எடுத்துக்கொள்ளவும்.

எங்கள் ஊரில் பேச்சுவழக்கில் அதிகமான பழமொழிகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த பழமொழிகளில் அரைசதத்தை எழுதுகிறேன். ஏதாவது பிழை இருப்பின் அதற்காக வருந்துகிறேன். சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

1. உப்பிட்டவரை உள்ளளவும் நினை !
2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
3. சட்டியில் இருந்தால்தான் ஆப்பையில் வரும் ! [ஷஷ்டியில் இருந்தால்தான் அகப்பையில் வளரும் !]
4. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது !
5. எள் என்றால் எண்ணெயாய் இரு !
6. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை !
7. தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் !
8. மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி !
9. வர வர மாமியார்,கழுதைபோல போனாலாம் !
10. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் !
11. கணவனே கண் கண்ட தெய்வம் !
12. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு !
13. தனக்கு போகதான் தானமும் தர்மமும் !
14. மனமிருந்தால் மார்க்கமுண்டு !
15. பொறுத்தார் பூமியாள்வார் !
16. ஆற்று நிறைய தண்ணீர் போனாலும் நாய் நக்கிதான் குடிக்கும் !
17. நாய் வாலை நிமித்த முடியாது !
18. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை !
19. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா? !
20. இனம் இனத்தோட சேரும் !
21. காலம் பொன் போன்றது,கடமை கண் போன்றது !
22. இக்கரைக்கு அக்கரை பச்சை !
23. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !
24. சிறுதுளி பெருவெள்ளம் !
25. சிறு துரும்பும் பல் குத்த உதவும் !
26. மின்னுவதெல்லாம் பொன்னல்ல !
27. நிறைகுடம் நீர் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் !
28. குறைக்கும் நாய் கடிக்காது !
29. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் !
30. காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு !
31. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது !
32. ஆழம் தெரியாமல் காலை விடாதே !
33. வெட்டிட்டு வானா, கட்டிட்டு வருவான் !
34. கூழானாலும் குளித்துகுடி, கந்தையானாலும் கசக்கிகட்டு !
35. காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது !
36. சிட்டு குருவிக்கு பட்டம் கட்டியமாதிரி !
37. உயர உயர பறந்தாலும், ஊர்குருவி பருந்தாகாது !
38. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு !
39. ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்பனாம் !
40. அறுக்க தெரியாதவனுக்கு 58 அரிவாளாம் !
41. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் !
42. ஊர்குருவி எவ்வளவு உயரபறந்தாலும் ஊர் போய்சேராது !
43. பனமரத்தின் கீழ்நின்று பால் குடித்தாலும், கள் குடித்ததாகத்தான் அர்த்தம் !
44. வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
45. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் !
46. புலி பசித்தாலும் புல்லை திங்காது !
47. தன் கையே தனக்குதவி !
48. அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் !
49. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் !
50. பேராசை பெரு நஷ்டம் !
51. அழுதாலும் பிள்ளையை அவள்தானே பெறவேண்டும் !

யப்பாடா ! ஒரு வழியா அரைசதம் போட்டாச்சு, இனி அவுட்டானாலும் கவலையில்லை... நீங்கள் விருப்பப்பட்டால் சதம் அடிப்பதற்கு முயற்சிபண்ணலாம்..!

Monday, March 2, 2009

ஆட்டுக்குட்டியும், அமைச்சர் லல்லுவும்!

 

பத்து தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பரபரப்பாகவும்,ஆச்சர்யமாகவும் பேசப்பட்டதும்,தினகரன் நாளிதழில் வெளியான ஒரு உண்மை செய்தி :

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த 8ம்தேதி செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலை துவக்கி வைப்பதற்கு அமைச்சர் லாலுபிரசாத் அவர்கள் திருச்செந்தூர் வந்தார். அப்போது திருச்செந்தூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அமைச்சருக்கு பிறந்து 20 நாட்கள் ஆன அழகான ஆட்டுகுட்டியை நினைவு பரிசாக வழங்கினார். பிராணிகள் மீது கொள்ளைபிரியம் கொண்ட அமைச்சர் லாலு பாட்னாவில் உள்ள தனது வீட்டிற்கு அக்குட்டியை கொண்டு சென்றார்.

தாயை பிரிந்த ஏக்கத்தில் குட்டி ஆடு பால் குடிக்காமல் அடம்பிடித்தது. இதனால் ஆட்டுகுட்டியின் உடல்நிலை மோசமானது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பயனளிக்கவில்லை. உடனடியாக தாயையும், குட்டியையும் சேர்த்து விட முடிவு செய்யப்பட்டு திருச்செந்தூருக்கு தகவல் தரப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள அமைச்சரின் ஆதரவாளர்கள் நினைவு பரிசு கொடுத்த ஆட்டின் உரிமையாளரை பலமணி நேரம் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் விவரத்தைச் சொல்லி, தாய் ஆட்டை      வாங்கிவந்து அதற்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டின் உடல்நலத்தை கவனிக்க ஒரு கால்நடைமருத்துவரும், ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட்டனர்.இதையடுத்து தாய் ஆட்டை திருச்செந்தூரில் இருந்து தூத்தூக்குடிக்கு காரில் கொண்டுசென்று அங்கிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் மதுரைக்கும் அங்கிருந்து சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸில் டெல்லிக்கும் கொண்டுசெல்லப்பட்டது.இந்த இரயிலில் ஆட்டுடன் ஒரு கால்நடை மருத்துவர் உட்பட மூன்று நபர்கள் டெல்லி சென்றனர். இதற்கிடையில் தாயை காணாமல் தவிக்கும் குட்டியை பாட்னாவிலிருந்து டெல்லிக்கு கொண்டு வந்தனர். 3நாள் பயணத்தை முடித்த தாய் ஆடு குட்டியைக் கண்டதும் பாசத்துடன் அழைக்க.. தாயின் சத்தம் கேட்ட குட்டிஆடும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து 8 நட்களுக்கு பிறகு பால் குடித்தது. இதை அங்கிருந்த அனைவரும் கண்டு ரசித்தனர்.

2OCASTN17BCA9CS827CAS539LGCA27P2SUCA7WLU7KCA28A50XCAHA24R5CAPVWPL8CAM2F6NJCAG9CIMZCATQCQOZCAII7WD1CA7W598YCAQKRQAHCAYYI3TGCA3NLPKVCAIGLL1BCANU3EWTCAFCU9FI

குட்டிஆட்டிற்காக எடுத்த முயற்சிக்காக வன உயிரின அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.பின்னர் தாயும்,குட்டியும் பாதுகாப்பாக டில்லியிருந்து பாட்னாவில் உள்ள அமைச்சர் லல்லு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.

.