Wednesday, July 29, 2009

வராவிட்டாலும் விருது வாங்குவோம்ல?!


சுமார் இரண்டு மாதங்களாக பதிவுலகிற்கே வராவிட்டாலும் விருது வாங்கியிருப்பது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.எனக்கு இவ்விருது வழங்கிய சகோதரி காயத்ரி அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.


தீவிரவாத தாக்குதல் நடக்காமலிருப்பதற்காக இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தியிருப்பது பற்றி தாங்கள் அனைவரும் அறிந்ததே! இச்சூழல் காரணமாக கடந்த சில மாதங்களாக பணிபளு அதிகமாகியுள்ளது. ( கடைசியாக நான் எடுத்த என்னுடைய‌ வார ஓய்வு ஜுன் 14. )


எங்கிருந்தாலும் என் மனதில் பதிவுலக நண்பர்கள் பற்றி ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும். நேரம் கிடைக்கும்போது பதிவோடும்,பின்னூட்டங்களோடும் உங்களை சந்திக்கிறேன்.அதுவரை என்னை மனதில் நினைத்திருக்கும் என் பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.