Friday, May 29, 2009

இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்...?.

எல்லோருமே இரயில் பயணம் செய்திருப்பீர்கள். பயணங்களில் எல்லோரும் இரயில் பயணங்களையே மிகவும் விரும்புவர். இரயில் பயண‌ம் சுகமான பயணமாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய பயணமாக முடிகிறது. இரயில் பயணம் ஆரம்பம் முதல் முடியும் வரை பிரச்சனைகள் இருந்தாலும், முதலில் இரயில் ஏறும் வரை உள்ள பிரச்சனைகளுக்கு எனக்கு தெரிந்த தீர்வுகளை சொல்கிறேன். ( இந்திய இரயில்வேக்கு மட்டும்).

1. பி.என்.ஆர்.:

பயணம் செய்ய முடிவு செய்து டிக்கட் ரிசர்வ் செய்வதில் சிலருக்கு காத்திருப்போர் பட்டியலில் இடம் கிடக்கிறது. இவர்கள் இரயில் ஏறும் வரை தமக்குண்டான சீட் உறுதியாகிவிட்டாதா? என்பதில் குழப்பம். இதற்கு தீர்வு...
உங்கள் கையில்., ஆம்.. உங்கள் செல்போனில் மெஸேஜ் பகுதிக்கு சென்று டிக்கட்டில் உள்ள பி.என்.ஆர். எண்ணை மட்டும் டைப் செய்து 9773300000 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள், பதில் கிடைக்கும்.

2. இலவச கார் வசதி:

வயதானோர், ஊனமுற்றோர், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருடன் நீங்கள் பயணம் செய்யும்போது அவர்களை உங்களது இருக்கைக்கு அழைத்து செல்ல சிரமப்படுவீர்கள். இதற்கான தீர்வு: இரயில் நிலைய வாசலுக்கு வந்தவுடன் தங்கள் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நிலைய மேலாளர் அலுவலகம் செல்லுங்கள். அங்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ள பேட்டரியில் இயங்கும் சிறியரக கார் உங்கள் குடும்பத்தாரை த‌ங்கள் இருக்கைக்கு அழைத்துச் செல்லும். இது ஒரு இலவச சேவையாகும். ( இவ்வசதி முக்கிய இரயில் நிலையங்களில் மட்டுமே உள்ளது. ஆனால் அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச சக்கரநாற்காலி கிடைக்கும்.)

3. உடனடிப் பதிவு:

சில சமயங்களில் திடீரென இரயிலில் பயணிக்க வேண்டியிருக்கும் அப்போது டிக்கெட் கிடைக்காது என்று வருத்தப்பட்டு பஸ்ஸில் செல்வதுண்டு. இதற்கு.. இரயில் கிளம்பும் இரண்டு மணி நேரத்திற்கு முன் இறுதிப்பட்டியில் தயார் செய்யப்படும். இதற்குபின் காலியாக உள்ள வி.ஐ.பி மற்றும் சில முக்கியபிரிவுகளுக்கான இடஒதுக்கீடு இருக்கை மற்றும் கடைசி நேரத்தில் ரத்து செய்யும் இருக்கைக்கான டிக்கெட் வழங்கப்படும். முயற்சிக்கலாம்.

4. சாதாரண டிக்கெட்:

பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு பிரிவில் செல்லும் பயணிகள் எப்பொழுதுமே கடைசி நேரத்தில் கவுண்டரில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதற்கு... அனைத்துவிதமான‌ இரயில் நிலையங்களிலும் இந்தவகை டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் இந்த வகை டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வாங்க முடியும். ( முக்கியமாக.., சென்னையில் வசிக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களில் காத்திருக்காமல், சென்னையின் அனைத்து புறநகர் இரயில் நிலையங்களிலும் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இவ்வகை டிக்கெட் பெறலாம்.) தேவையில்லை என்றால் கூட இந்தவகை டிக்கெட்டையும் ரத்து செய்யமுடியும். இதற்கான கட்டணம் 10 ரூபாய்.

5. தவறவிடும் இரயில்கள்:

கடைசி நேரத்தில் இரயிலை தவறவிடும் நிலை ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது... பயணிகள் சேவை மையத்திற்கு செல்லுங்கள். தங்கள் பயணம் முக்கியமானதாகவும், தாமதத்திற்கான காரணங்கள் ஏற்புடையாதகவும் இருந்தால்,அடுத்த இரயிலில் இடம் இருக்கும் பட்சத்தில் மாற்றி தர‌ வழிவகை செய்யப்படும். இவ்வகை டிக்கெட்டினை ரத்து செய்யவும் முடியும்.

சிறு தகவல்கள்:

1. இரயில் கிளம்பும் ஒரு மணிநேரத்திற்கு முன்புதான் இரயில்பெட்டிகள் தண்டவாளத்திற்கு கொண்டுவரபட்டு,கதவுகள் திறக்கப்பட்டு,மின் இணைப்பு கொடுக்கப்படும்.

2.இரயில் கிளம்பும் முக்கால் மணிநேரத்திற்கு முன்புதான் இரயில் நிலையத்தின் நுழைவுவாயல் பகுதியில் தங்கள் டிக்கெட்டின் இறுதிநிலை பற்றிய வகுப்புவாரியான பட்டியல் ஒட்டப்படும்.

3. இரயில் கிளம்பும் அரை மணிநேரத்திற்கு முன்புதான் தங்கள் இருக்கைக்கான எண் மற்றும் பெட்டி எண் கொண்ட இறுதிப்பட்டியல் பெட்டியில் ஒட்டப்படும்.

4. இரயில் கிளம்பும் கால் மணிநேரத்திற்கு முன்புதான் டிக்கெட் பரிசோதகர் தங்கள் பெட்டி அருகே வருவார்.(மூன்று பெட்டிக்கு ஒருவர்).

தொட‌ரும்...

.

Tuesday, May 26, 2009

பணிமாற்றம்..இனி படையெடுப்பு..!

யப்பாடியோவ்... ஒரு பெருமூச்சு விட்டுக்கிறேன்... ஒரு வழியாக தேர்தல் முடிந்துவிட்டது. நமது எல்லையில் அதிகம் பதட்டம் இல்லாமல் முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி நினைத்துகொண்டு ரிலாக்ஸாகும் நேரத்தில் ஒரு சின்ன குண்டு... என்னவென்று பதட்டமாக.. "அதி தீவிரப் படை (கமாண்டோ)" பிரிவுக்கு பணியமர்த்தபட்டு மூன்று வருடங்கள் முடிந்துவிட்டதால் (மே 20) பணியிட மாற்றம்.

அய்யய்யோ... எப்போ... எங்கே... வெடிக்கபோகுதோ... பதட்டதோடு இரண்டு நாட்கள் அமைதிகாக்க... வெடித்தது நேற்று (மே 25)... எங்கே தெரியுமா?...



"சிறப்பு அதி தீவிரப் படை ( ஸ்பெஷல் கமாண்டோ)"-சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். எனக்கு பிடித்த ஆர்வமுள்ள இடத்திற்கே பணி மாற்றம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இனி...

ஓய்வுவெடுத்து வாரக்கணக்கில் ஆகிவிட்டதால் ஒரு வாரகாலம் (ஜூன் 2) விடுமுறை எடுத்து விட்டு...

பணியில் சேரவும்., ப்ளாக் மீது படையெடுப்பும்...

.