Sunday, December 28, 2008

நேர்மறையான கண்ணோட்டம்.!

மேரி என்னும் ஆசிரியை பள்ளிக்கூடம் ஆரம்பித்த முதலாவது நாள்
ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஒரு பொய்யைச் சொன்னார். தான் அனைவரையும் ஒரே விதத்தில், நேசிப்பதாகச் சொன்னார்.
ஆனால் அது சாத்தியமில்லாமல் இருந்தது.
ஏனெனில் முதல் வரிசையில், ஜான் என்னும் சிறுவன் எதிலும் அக்கறையில்லாமல் இருந்தான். யாருடனும் விளையாடமலும்,உடைகள் அழுக்காகவும், பார்ப்பவர்கள் வெறுக்கும்படியாக இருந்தான்.
மேரி சிவப்பு மையினால் அவனுடைய விடைத்தாளில் 'F'(தோல்வி) என்று குறிப்பிடுவதில் உண்மையில் மகிழ்ச்சியடைந்தார்.

ஒரு நாள் ஒவ்வொரு குழந்தைகளின் முந்தைய வருடங்களின் குறிப்பேட்டை ஆய்வு செய்யவேண்டிருந்தது.அப்பொது ஜான் குறிப்பேட்டை பார்த்தபோது மேரி வியப்படைந்தார்.
ஜானின் குறிப்பேட்டில்...
முதல் வகுப்பு: ஜான் மிகவும் புத்திசாலி.சிரித்த முகத்துடன் இருப்பான். தன் வேலையை ஒழுங்காக செய்வான்.
இரண்டாம் வகுப்பு: ஜான் மிகவும் தலைசிற‌ந்த மாணவன்.வகுப்பு மாணவர்களால் விரும்பப்படுபவன்.
மூன்றாம் வகுப்பு: அவன் அம்மாவின் திடீர் மரணம் அவனைக் கடுமையாக பாதித்திருந்தது.அவனுடைய அப்பா அவன் மீது ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான்.
நான்காம் வகுப்பு: ஜான் மிகவும் விலகியே இருக்கிறான். அவன் படிப்பில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
இப்போது மேரி பிரச்சனை என்ன என்பதை உணர்ந்தார். தன்மீதே ஒரு அவமான உணர்வு ஏற்பட்டது.
'கிறிஸ்துமஸ்' பரிசுகள் பல மாணவர்கள் கொடுத்தாலும் ஜான் கொடுத்த பழைய போலி வைர வளையலை தன் கையில் அணிந்துகொண்டு ஜானிடம் காட்டினார். "மேரி அவர்களே,என் அம்மா எப்படி மணம் வீசுவார்களோ அப்படியே நீங்களும் இன்று இருக்கிறீர்கள்" என்றான்.
அன்றைய தினத்திலிருந்து மேலோட்டமாக கற்றுக் கொடுப்பதை விட்டு விட்டு மாணவர்களுக்கு உண்மையாகவே கற்றுக்கொடுத்தார். ஜானின் மீது தனி கவனம் செலுத்தினார்.அவனுடைய மனம் புத்துயிர் பெற்ற‌து.ஜான் வகுப்பிலேயே சாமர்த்தியமான மாணவனான். ஆசிரியரின் செல்ல பிள்ளையானான்.

பல வருடங்கள் ஒடின...
ஆசிரியருக்கு ஜானிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் தான் உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்து விட்டதாகவும், தன் வாழ்க்கையிலேயே இன்னமும் மேரி தான் மிகச்சிறந்த ஆசிரியர் என்றும் குறிப்பிட்டிருந்தான். இன்னும் சில வருடங்கள் ஒடின..
மற்றொரு கடிதம் வந்தது. தான் உயர் படிப்பு முடித்துவிட்டதாகவும், அவனுக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர்களில் மேரிதான் அவனுக்குப் பிடித்தமிகச்சிறந்த ஆசிரியை என்றும் எழுதி இருந்தான்.
அத்துடன் தான் ஒரு பெண்ணைச் சந்தித்தாகவும், அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், மணநாள் அன்று மணமகனின் அம்மாவிற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர சம்மதம் கேட்டும் எழுதியிருந்தான்.
கடித முடிவில்.. ஜான்.எஃப்.ஸ்டோட்டர்டு.M.D. என்று கையெழுத்திடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் மேரிக்கு கண்ணீர் பொங்கியது.

ஜான் பரிசாக தந்த அந்த போலி வைர வளையலை அணிந்துகொண்டு திருமணத்திற்கு வந்தார். இருவரும் ஒருவரையொருவர் கட்டி கொண்டனர். டாக்டர்.ஜான், மேரியின் காதில்.. "என்மீது ந்ம்பிக்கை வைத்ததற்கு மிக்க ந்ன்றி" என்றான். மேரி தன் கண்களில் கண்ணீருடன்.."ஜான். நீ எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.என்னாலும் வித்தியாசமாக மாற முடியும் என்பதை கற்றுக் கொடுத்தவனே நீதான்!." என்றார்.

"இன்றைக்கு யாராவது ஒருவர் இதயத்திற்கு இதமளியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும்,எதைச் செய்தாலும், ஒரு நபரின் கண்ணோட்டத்தை உணரவோ,அதை மாற்றவோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவு கொள்ளுங்கள்.அதை ஒரு நேர்மறையான வழியில் செய்ய முயலுங்கள்."

குறிப்பு: ராம் சந்த்ர மிஸன் வெளியீட்டுள்ள சகஜ தீபம் என்ற புத்தகத்தில் படித்தது.

4 comments:

ச.பிரேம்குமார் said...

அருமையான கதை ராம். பகிர்ந்தமைக்கு நன்றி :)

ராம்.CM said...

நன்றி ப்ரேம்.! வருகைக்கு மகிழ்ச்சி.

Thamira said...

நெஞ்சைத்தொட்ட கதை.!

ராம்.CM said...

நன்றி தாமிரா.! வருகைக்கு மகிழ்ச்சி.!