Thursday, December 25, 2008

டிராபிக் ஜாம் குறைய..!

நேற்று: மாலை 05.50 மணியளவில், பெருங்குடி செல்வதற்கு நானும் என் சகோதரரும் காரில் சென்றோம். மத்திய கைலாஸ், ராஜீவ்காந்தி சாலையில் அவர் காரை செலுத்தினார். 500 மீட்டர் சென்றிருக்கமாட்டோம் பயங்கர டிராபிக். பலவித கருத்துக்களை பரிமாறிகொண்டே கார் ஊர்ந்தது. 20 நிமிடம் ஓடியது. கார் டைடல் பார்க் சிக்னலில் நின்றது. இந்த ஒரு சிக்னலுக்காக 20 நிமிடமா? என்றவாறே பின்புறம் எட்டி பார்த்தேன். ஏகப்பட்ட கார்கள் நின்றன. ஒவ்வோரு கார்களிலும் அதிகபட்சமாக ஓட்டுனர் மட்டுமே இருந்தனர். ஒரு நபருக்காக ஒரு கார் என்று எண்ணியபடியே எப்படியோ ஊர்ந்து சென்றோம்.


இன்று: வேலைக்கு செல்ல டூ வீலரில் வேகமாக புறப்பட்டேன். தேனாம்பேட்டை,அண்ணாசாலை சிக்னல் எனை மறித்தது. அப்போது அருகில் நின்ற காரை பார்த்தேன். அதில்.. ஓட்டுனர் மட்டும்...

'வாகனங்களுக்கு அதிகபட்ச நபர்கள்' என்று வரையறுக்கப்பட்டது போல குறைந்தபட்ச நபர்கள் என்று வரையறுக்கப்பட்டு மருதி800,சென்,ஸேன்ரோ போன்ற உருவத்தில் சிறியரக கார்களில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள். சுமோ,குவாலிஸ்,இணோவா போன்ற உருவத்தில் பெரியரக கார்களில் குறைந்தபட்சம் நான்கு நபர்கள் என்று ஒரு சட்டம் கொண்டு வ‌ந்தால்தான் "டிராபிக்ஜாம்" குறையும் என்று யோசித்துக்கொண்டே பச்சைவிளக்கு அனுமதியுடன் வளைய நெளிய தொடங்கினேன். ஹிஹி..


குறிப்பு: நாங்கள் சென்றது ஆல்டோ கார்.என் சகோதரருக்கும் இது பொருந்தும்.

2 comments:

ச.பிரேம்குமார் said...

ராம், நீங்கள் சொல்வது நல்ல யோசனையாக தான் இருக்கிறது. எனக்கு தெரிந்த நிறைய பேர் car pooling முறையை பயன்படுத்துகிறார்கள்

ராம்.CM said...

நன்றி ப்ரேம்.! வருகைக்கு மகிழ்ச்சி.