Friday, May 29, 2009

இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்...?.

எல்லோருமே இரயில் பயணம் செய்திருப்பீர்கள். பயணங்களில் எல்லோரும் இரயில் பயணங்களையே மிகவும் விரும்புவர். இரயில் பயண‌ம் சுகமான பயணமாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய பயணமாக முடிகிறது. இரயில் பயணம் ஆரம்பம் முதல் முடியும் வரை பிரச்சனைகள் இருந்தாலும், முதலில் இரயில் ஏறும் வரை உள்ள பிரச்சனைகளுக்கு எனக்கு தெரிந்த தீர்வுகளை சொல்கிறேன். ( இந்திய இரயில்வேக்கு மட்டும்).

1. பி.என்.ஆர்.:

பயணம் செய்ய முடிவு செய்து டிக்கட் ரிசர்வ் செய்வதில் சிலருக்கு காத்திருப்போர் பட்டியலில் இடம் கிடக்கிறது. இவர்கள் இரயில் ஏறும் வரை தமக்குண்டான சீட் உறுதியாகிவிட்டாதா? என்பதில் குழப்பம். இதற்கு தீர்வு...
உங்கள் கையில்., ஆம்.. உங்கள் செல்போனில் மெஸேஜ் பகுதிக்கு சென்று டிக்கட்டில் உள்ள பி.என்.ஆர். எண்ணை மட்டும் டைப் செய்து 9773300000 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள், பதில் கிடைக்கும்.

2. இலவச கார் வசதி:

வயதானோர், ஊனமுற்றோர், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருடன் நீங்கள் பயணம் செய்யும்போது அவர்களை உங்களது இருக்கைக்கு அழைத்து செல்ல சிரமப்படுவீர்கள். இதற்கான தீர்வு: இரயில் நிலைய வாசலுக்கு வந்தவுடன் தங்கள் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நிலைய மேலாளர் அலுவலகம் செல்லுங்கள். அங்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ள பேட்டரியில் இயங்கும் சிறியரக கார் உங்கள் குடும்பத்தாரை த‌ங்கள் இருக்கைக்கு அழைத்துச் செல்லும். இது ஒரு இலவச சேவையாகும். ( இவ்வசதி முக்கிய இரயில் நிலையங்களில் மட்டுமே உள்ளது. ஆனால் அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச சக்கரநாற்காலி கிடைக்கும்.)

3. உடனடிப் பதிவு:

சில சமயங்களில் திடீரென இரயிலில் பயணிக்க வேண்டியிருக்கும் அப்போது டிக்கெட் கிடைக்காது என்று வருத்தப்பட்டு பஸ்ஸில் செல்வதுண்டு. இதற்கு.. இரயில் கிளம்பும் இரண்டு மணி நேரத்திற்கு முன் இறுதிப்பட்டியில் தயார் செய்யப்படும். இதற்குபின் காலியாக உள்ள வி.ஐ.பி மற்றும் சில முக்கியபிரிவுகளுக்கான இடஒதுக்கீடு இருக்கை மற்றும் கடைசி நேரத்தில் ரத்து செய்யும் இருக்கைக்கான டிக்கெட் வழங்கப்படும். முயற்சிக்கலாம்.

4. சாதாரண டிக்கெட்:

பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு பிரிவில் செல்லும் பயணிகள் எப்பொழுதுமே கடைசி நேரத்தில் கவுண்டரில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதற்கு... அனைத்துவிதமான‌ இரயில் நிலையங்களிலும் இந்தவகை டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் இந்த வகை டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வாங்க முடியும். ( முக்கியமாக.., சென்னையில் வசிக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களில் காத்திருக்காமல், சென்னையின் அனைத்து புறநகர் இரயில் நிலையங்களிலும் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இவ்வகை டிக்கெட் பெறலாம்.) தேவையில்லை என்றால் கூட இந்தவகை டிக்கெட்டையும் ரத்து செய்யமுடியும். இதற்கான கட்டணம் 10 ரூபாய்.

5. தவறவிடும் இரயில்கள்:

கடைசி நேரத்தில் இரயிலை தவறவிடும் நிலை ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது... பயணிகள் சேவை மையத்திற்கு செல்லுங்கள். தங்கள் பயணம் முக்கியமானதாகவும், தாமதத்திற்கான காரணங்கள் ஏற்புடையாதகவும் இருந்தால்,அடுத்த இரயிலில் இடம் இருக்கும் பட்சத்தில் மாற்றி தர‌ வழிவகை செய்யப்படும். இவ்வகை டிக்கெட்டினை ரத்து செய்யவும் முடியும்.

சிறு தகவல்கள்:

1. இரயில் கிளம்பும் ஒரு மணிநேரத்திற்கு முன்புதான் இரயில்பெட்டிகள் தண்டவாளத்திற்கு கொண்டுவரபட்டு,கதவுகள் திறக்கப்பட்டு,மின் இணைப்பு கொடுக்கப்படும்.

2.இரயில் கிளம்பும் முக்கால் மணிநேரத்திற்கு முன்புதான் இரயில் நிலையத்தின் நுழைவுவாயல் பகுதியில் தங்கள் டிக்கெட்டின் இறுதிநிலை பற்றிய வகுப்புவாரியான பட்டியல் ஒட்டப்படும்.

3. இரயில் கிளம்பும் அரை மணிநேரத்திற்கு முன்புதான் தங்கள் இருக்கைக்கான எண் மற்றும் பெட்டி எண் கொண்ட இறுதிப்பட்டியல் பெட்டியில் ஒட்டப்படும்.

4. இரயில் கிளம்பும் கால் மணிநேரத்திற்கு முன்புதான் டிக்கெட் பரிசோதகர் தங்கள் பெட்டி அருகே வருவார்.(மூன்று பெட்டிக்கு ஒருவர்).

தொட‌ரும்...

.

27 comments:

வடுவூர் குமார் said...

பரவாயிலையே!இவ்வளவு வசதி இருக்கா?
இதெல்லாம் நிலையத்தின் உள்ளே போடலாமே?

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதிவு ராம்.. நிறைய தகவல்கள் சேகரிச்சு இருக்கீங்க.. இதை எல்லா ரயில் நிலைய வாசல்களிலும் வைக்க முடிந்தால் நன்றாக இருக்கும்..

சொல்லரசன் said...

சில தகவல்கள் அறிந்த‌து,சில தகவல் உங்க பதிவில் அறிந்துகொண்டேன்
நல்ல பகிர்வு ராம்.

கலையரசன் said...

நான் விரும்பிய தகவல்..
நன்றி!
அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்!

டைம் இருந்தா அப்படியே நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

வேத்தியன் said...

உபயோகமான பதிவுங்க...

பழூர் கார்த்தி said...

உபயோகமான தகவல்கள், நன்றி!!

sakthi said...

மிக மிக பயனுள்ள பதிவு ராம் அண்ணா

ஆ.ஞானசேகரன் said...

அருமை, பயன் உள்ள பதிவு

ஆ.ஞானசேகரன் said...

எல்லாம் சரி நண்பா, இதெல்லாம் சரியாக நடக்காவிட்டால் யாரிடம் புகார் கூறி சரிசெய்ய முடியும். நமது நாட்டை பொருத்தவரை நல்ல சட்டங்கள் அமைந்த அத்துமீரல்கள்....

ஆதவா said...

எல்லாமே புதிய தகவல்கள். இந்த பதிவு சேமித்து வைக்கவேண்டிய பதிவு. இரயில் நிலையங்களில் பயணித்ததோடு சரி. இவ்வளவு தகவல்களை சேகரித்ததில்லை!!!! அருமை!!!!

malar said...

உபயோகமான தகவல்கள், நன்றி!!

ஆ.சுதா said...

இரயில் பற்றிய குறிப்பு இரயிலை போலவே சுவாரசியமா நல்ல தகவலா எழுதியிருக்கீங்க ராம்.

நல்ல பதிவு,

சக்தி said...

very informative !!
keep goin !

ச.பிரேம்குமார் said...

ராம், அருமையான பதிவு.

ஸ்ரீ.... said...

பயணிகளுக்கான கருத்துள்ள பதிவு.

ஸ்ரீ....

புருனோ Bruno said...

பயனுள்ள தகவல்கள்

நன்றி :)

உமா said...

மிக நல்ல பதிவு.

goma said...

அருமையான தொகுப்பு.
பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்.தொடரட்டும் உங்கள் தொண்டு

Vishnu - விஷ்ணு said...

இவ்வளவி விஷயங்கள் இருக்கா.. முயற்சி செய்யாமுன்னு இருக்கிறேன்..

ராம்.CM said...

நன்றி வடுவூர் குமார்! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி கார்த்திகைப் பாண்டியன்!

நன்றி சொல்லரசன்!

நன்றி கலையரசன் !வருகையில் மகிழ்ச்சி!

நன்றி வேத்தியன்!

நன்றி பழூர் கார்த்தி!வருகையில் ஆனந்தம்.

நன்றி சக்தி!

நன்றி ஆ.ஞானசேகரன் !//நமது நாட்டை பொருத்தவரை நல்ல சட்டங்கள் அமைந்த அத்துமீரல்கள்....// இருந்தாலும் கூட ஜனநாயக நாட்டில் தட்டிகேட்கும் உரிமை சாதாரண குடிமகனுக்குகூட உண்டு.


நன்றி தமிழினி!

நன்றி ஆதவா!

நன்றி மலர்!

நன்றி ஆ.முத்துராமலிங்கம் !

நன்றி சக்தி!

நன்றி க‌வின்!

நன்றி பிரேம் !

நன்றி ஸ்ரீ !

நன்றி புருனோ!வ‌ருகையில் ம‌கிழ்ச்சி!

நன்றி உமா!

நன்றி கோமா! வ‌ருகையில் ம‌கிழ்ச்சி!

நன்றி விஷ்ணு!

ராம்.CM said...

எனக்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டு சிறப்பித்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி !

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல்கள்

பகிர்வுக்கு நன்றி.

gayathri said...

பயனுள்ள பதிவு ராம் அண்ணா
பகிர்வுக்கு நன்றி.

Thamira said...

பயனுள்ள பதிவு ராம் சார்.!

நையாண்டி நைனா said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்... வாங்களேன்.... வந்து களத்திலே இறங்குங்க....

ராம்.CM said...

நன்றி ந‌ட்புடன் ஜமால்!

நன்றி காயத்ரி!

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!

நன்றி நையான்டி நைனா! கூப்ட்டீங்கள்ல... இறங்கிருவோம்!

Pradeep said...

நல்ல உபயோகமான தகவல் ராம்.